Saturday, August 10, 2024

Platform Ticket : பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிக்கலாம் - எப்படி தெரியுமா?

பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கும் பயணிகள், ரயிலில் பயணிக்கலாம் என்ற தகவல், பல லட்சம் பேருக்கு தெரியாது. ரயில்வே விதிகள் என்னவென்று பார்க்கலாம்.


உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரயில் சேவை சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணமும், சிறந்த வசதிகளும் இருப்பதால், ரயில்களில் பயணம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.


நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆனால், ரயில்வே விதிகள் குறித்த தெளிவான புரிதல் பலருக்கு இல்லை. பிளாட்பாரம் டிக்கெட்டில் ரயிலில் பயணம் செய்யலாம் என்பது பலருக்குத் தெரியாது. ஆச்சரியமாக இருக்கிறதா?


பல சமயங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக ரயில் நிலையம் செல்வோம். அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்குள் நுழைய பிளாட்பாரம் டிக்கெட் எடுப்போம். நடைமேடை டிக்கெட் எடுக்கவில்லை என்றால் ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம். இது மிகவும் பொதுவான செயல்முறையாகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்ய முடியும். இது ரயில்வே விதிகளில் தெளிவாக உள்ளது.


அவசர காலங்களில் மட்டும் இந்த அனுமதி உண்டு. உதாரணமாக, ரயிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஏற்றிவிடச் செல்லும்போது, சாமான்களை வைக்க ரயிலில் ஏறுகிறோம். சில சமயம் நாம் இறங்குவதற்கு முன், ரயில் நகரலாம். ரயிலில் இருந்து இறங்க வேண்டிய நிலை இல்லை என்றால், இயல்பாகவே நமக்கு பயம் வந்துவிடும். ஏனென்றால் நம்மிடம் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் மட்டுமே உள்ளது. ரயில் டிக்கெட் இல்லை. ஆனால் இதுபோன்ற அவசர நிலைகளில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயில் பயணம் இலவசம்.


இந்திய ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் 2 மணி நேரம் செல்லுபடியாகும். பிளாட்பார்ம் டிக்கெட் தொடர்பான விதிமுறை என்ன? பிளாட்பாரம் டிக்கெட்டுடன் பயணித்தால், உங்களை ரயிலில் இருந்து எவராலும் தடுக்க முடியாது.


அதாவது, அவசர காலத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் மட்டும் வைத்திருந்தால், ரயிலில் இருந்து இறங்க முடியாவிட்டால் முதலில் TTE-யிடம் சென்று, கீழே இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரை டிக்கெட் எடுக்கலாம். இங்கு அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.


நான் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் நான் பயணம் செய்யலாமா?
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது உங்கள் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், ரயில் புறப்படும் முன் உறுதி செய்யப்பட்டால் தவிர உங்களால் பயணிக்க முடியாது. ஏனெனில் ரயில் பயணத்திற்கு ஆன்லைன் டிக்கெட் செல்லாது. நீங்கள் செல்லாத டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்தால், உங்கள் மீது TTE நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

LET'S SEE BENEFITS OF HAVING A CAT AT HOME AND WHAT DO DIFFERENT CAT POSTURES MEAN?

  Having a cat at home brings a variety of  benefits —both emotional and physical. In addition, understanding  cat body language and postu...